தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூ, அரியலூர், திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நான்கு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப் போலவே கடலூர், திருவள்ளூர், காஞ்சி, சேலம், நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.