ஆவடி மாநகராட்சி பகுதியில் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 எஸ்ஐ, 10 காவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் பரிந்துரையின்படி டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றத்தை தடுக்க வேண்டிய காவலர்களே குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் காரணமாக துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.