அரசுத்துறையில் காலியாக உள்ள குரூப் 2, 2 ஏ, குரூப் 4 பதவிகளில் உள்ள காலி பணியிட விவரங்களை மனிதவள மேலாண்மை துறைக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடமிருந்து காலி பணியிட விவரங்கள் பெறப்படும். அதற்கு ஏற்றது போல ஆண்டு அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்.