தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நவம்பர் 27ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழை ருத்ரதாண்டவம் ஆடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

அதனைப் போலவே இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.