தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிவேக இன்டர்நெட் சேவையை ஏற்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 200 mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் 1500 ரூபாய் செலவில் நிறுவிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை பள்ளி மேலாண்மை குழுவுக்கு அனுப்பப்படும் என பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் கூறியுள்ளது