தமிழகத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை வீடு வீடாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  முதல்வர் ஸ்டாலின் கூறினார். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் அரசியலிலும் கட்சியிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் எனவும் அடிமட்ட தொண்டர்கள் வரையிலான அனைத்து விவரங்களையும் தலைமை கழகம் அறிவித்துள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும், பாஜகவின் அநீதிகள் மற்றும் திமுகவின் சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார்.