தமிழகத்தில் மழைக்கால காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என்று சுகாதாரச் செயலாளர் ககம்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனைகளை அணுக வேண்டும் என கூறிய அவர், அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் சோர்சிங் முறையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.