தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் பெயர் பட்டியலில் தவறு ஏதும் ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்றும் எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தம் கோரி அனுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.