தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு திட்ட செயலாக்குத்துறை துணைச் செயலாளராக பிரதாப், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக ரத்னா, சென்னை பெருநகர வளர்ச்சி அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இயக்குனராக விஜய கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.