திமுகவின் இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான TKS இளங்கோவன், இந்த அரசியலை நாம் உற்றுப் பார்க்கின்ற போது ஏறத்தாழ 1972 தொடங்கி, 2018 வரை நமக்கு எதிரியாக,  நாம் பார்த்தது அதிமுகவுக்கு தலைமை ஏற்று இருந்த எம்ஜிஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும்.. கொள்கை ரீதியாக அவர்களோடு முரண்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

காரணம்,  எம்ஜிஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலே அறிஞர் அண்ணா அவர்களிடம் இருந்து கொள்கையை கற்றுக் கொண்டு…  தொடர்ச்சியாக அந்த பாணியில் இருந்து பெரிய அளவில் விலகாமல் அரசியல் நடத்தினார். ஜெயலலிதா நம்முடைய இயக்க கொள்கைகளுக்கு தொடர்பிலாதவர்.  ஆனாலும் அந்த கட்சி எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி என்ற வகையிலே…

நம்முடைய பணிகள் மேடையில் ஏறினால்,  எம்ஜிஆர்,  ஜெயலலிதாவையும் திட்றது தான் நம்மளுடைய பேச்சா இருந்துச்சு…  வேற நமக்கு பேசுவதற்கான வாய்ப்பு, பொருள் கிடையாது. ஆனால் இன்றைக்கு நமக்கு ஒரு எதிரி தோன்றி  இருக்கிறார் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எதிரி கொள்கை ரீதியான எதிரி. பாஜக என்பது ஒரு கொள்கை ரீதியான எதிரி. அந்த எதிரி இங்கே உள்ள  இன்றைய அதிமுகவையும் சேர்த்து இயக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு எதிரி என தெரிவித்தார்.