ஐரோப்பிய யூனியனின் சார்பில் செயல்படுத்தப்பட்ட ‘சுவிட்சிங் டூ கிரீன் அண்ட் ஃபேர் ஃபேஷன்’ என்ற பசுமை மற்றும் நியாயமான ஆடை உகப்புத் திட்டம், தனது நான்கு ஆண்டு காலப் பயணத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பருத்தி விவசாயிகள், ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் எனப் பல தரப்பினரும் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான பருத்தி சாகுபடி முறைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் திட்டத்தின் மூலம் 9,500-க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் நேரடியாகப் பயிற்சி பெற்றுள்ளனர். ஆடைத் துறையில் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், சுமார் 580 ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இத்திட்டம் வலுவான ஆதரவை வழங்கியுள்ளது.

“>

 

நவீன நாகரிக உலகத்தில் சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 50,000-க்கும் மேற்பட்ட நுகர்வோரும் இளைய தலைப்பினரும் இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.

 

நவீன ஆடை உற்பத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், நியாயமான வர்த்தக முறைகளையும் ஊக்குவிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் முன்னெடுத்த இந்தத் திட்டம், ஜவுளித் துறையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.