2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது இந்நிலையில் காலை உணவு திட்டத்தை அரசு பள்ளிகள் மட்டுமல்லாது, அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு, ஐகோர்ட் மதுரைக்கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த கோரிய பொதுநல வழக்கை, அரசின் பதிலை ஏற்று நீதிபதிகள் முடித்து வைத்தனர். அரசின் இந்த முடிவு, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.