காந்திபுரம் மேம்பாலம் பகுதியில இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் கோயிலை மேம்பாலத்திற்காக அந்த மக்கள் விட்டு கொடுத்தார்கள்,  இடித்தார்கள். இதுவரைக்கும் அந்த கோவிலை கட்டப்படவில்லை . இது தொடர்பாக நான் மாநிலத்தினுடைய அமைச்சருக்கும் தகவல் கொடுத்து இருக்கேன்,  உடனடியாக அந்த இடத்திலே அவர் அங்கு அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பேசினார்.

இதற்க்கு பதிலளித்த ஹிந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு, எடுக்கப்பட்ட திருக்கோவில் என்பது அது நெடுஞ்சாலை துறைக்கு  சொந்தமான பகுதியிலே அமைந்து இருந்தது. உங்களுடைய கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. தகுந்த இடம் கிடைத்த உடன் அந்த திருக்கோவில் மீண்டும் கட்டித்தருவதற்கு உண்டான நடவடிக்கை நிச்சயம் இந்து சமய அறநிலைய துறை எடுக்கும் என தெரிவித்தார்.