சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியானது இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் போட்டியை காண வரும் ரசிகர்களுடைய வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை ஆனது இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே கிரிக்கெட் போட்டியை பார்த்து திரும்பும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து விட்டு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரல் நிலையத்திலிருந்து பரங்கிமலைக்கு 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது .