தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்திற்கு ரயில் சேவையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக சேலம் எஸ்வந்த்பூர் இடையே ரயில் சேவை ஏப்ரல் ஒன்று முதல் ஏப்ரல் ஆறு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் எஸ்வந்த்பூர் இடையே தர்மபுரி ஓசூர் வழியாக இரு மார்க்கத்திலும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.

பராமரிப்பு பணி தற்போது நடைபெற இருப்பதால் சேலம் ஜங்ஷனிலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் சேலம் எஸ்வந்த்பூர் வண்டி எண் 16212 பயணிகள் ரயில் வரும் ஏப்ரல் 1 முதல் 6ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றது. எஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மாலை 3.55 மணிக்கு புறப்படும் சேலம் ஜங்ஷனுக்கு இரவு 9.45 மணிக்கு வந்தடையும் எஸ்வந்த்பூர் சேலம் பயணிகள் ரயில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் ஆறு வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.