திருப்பூர் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனை கண்டித்து கடந்த 35 நாட்களாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி ஓட்டு கேட்டு அரசியல்வாதிகள் ஊருக்குள் வரக்கூடாது என்று பேனர் வைத்துள்ளனர்.