தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையே எட்டு கோடி பேருக்குள் இருக்கும் நிலையில், ஐந்து கோடி பேர் விவசாயிகள் எனக் குறிப்பிடுவது முற்றிலும் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

விவசாயத் துறை சார்ந்த பட்ஜெட் விவாதங்களின் போது இது போன்ற தவறான புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை தோராயமாக எட்டு கோடி என்ற நிலையில், மாநிலத்தின் அதிகாரப்பூர்வமான விவசாய மக்கள் கணக்கெடுப்பின்படி வெறும் 79.38 லட்சம் செயல்பாட்டு நில உடமையாளர்களே உள்ளனர். விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்கள் பல கோடி பேருக்கு மறைமுகமாக வாழ்வாதாரம் அளிக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், எவ்வித தெளிவான வரையறையும் அதிகாரப்பூர்வ ஆதாரமும் இன்றி ஐந்து கோடி பேரை ‘விவசாயிகள்’ என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்துவது மக்களைத் திசைதிருப்பும் செயலாகும்.

பின்தங்கிய விவசாயத் துறைக்கான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நிதியாதாரங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்போது, அது தொடர்பான புள்ளிவிவரங்களைச் சரிபார்க்காமல் வெளியிடுவது தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“>

 

பொதுவெளியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இது போன்ற நிதி மற்றும் மக்கள் தொகை சார்ந்த தரவுகளைப் பகிரும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.