இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகளுக்கு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்படுமா என்று அமைச்சர் சுப்பிரமணியன் இடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர்,வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையில்லாத பதற்றம் வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.