சென்னையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 60 மாதங்களில் எடுக்க வேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால் தற்போது அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது. அதிமுகவால் இடைத்தேர்தலில் எவ்வளவு முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை.

அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில் இன்னும் பலவீனம் அடைந்தால் தான் அவர்கள் திருந்துவார்கள். கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் அவர்களுடைய சுய காரணத்திற்காக வெளியேறுகிறார்கள். அவர்களை தடுக்க முடியாது என்றார். மேலும் இன்று அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் துரோகிகள் கையில் மாட்டிக்கொண்டது எனவும் ஜெயலலிதாவின் கொள்கையை அடுத்த சந்ததியினருக்கு அமமுக கட்சி தான் எடுத்துச் செல்லும் என்று கூறினார்.