காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீர்னு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்ததை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுமார் 60,000 க்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு பெற்றால் போதும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் கூறியுள்ளார். இந்த செய்தி அவரது ஆதரவாளர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.