தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவதுடன் கருணை அடிப்படையில் வாரிசு நியமனத்திற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிறுத்தப்பட்ட அகலவிலைப்படி உயர்வு தொடர்பாகவும் தற்போதைய ஊழியர்களின் 14 மாத அகலவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை குறித்த விவரங்கள் பெறப்பட்டு அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். மேலும் அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையானை, பதவி உயர்வு மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.