சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறித்த அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையில் இருந்து ஆவடி, பட்டாபிராம், அரக்கோணம் மற்றும் திருத்தணி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இந்த பகுதிகளுக்கு 128 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 124 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதனைப் போலவே சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 124 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எட்டு ரயில்கள் குறைக்கப்பட்டு 116 ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.