தமிழகத்தில் அரசு உதவி வன பாதுகாவலர் பணியிடத்தை நிரப்பும் அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட நிலையில் இந்த வருடம் மே மூன்றாம் தேதி டிஎன்பிஎஸ்சி ACF முதல் நிலை தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த கட்ட முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல் https://tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் tnpsc முதன்மை தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் இருபதாம் தேதி வரை நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வர்கள் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை முதன்மை தேர்வுக்கான கட்டடத்தை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.