தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 வரையும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.