தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ள நிலையில் அவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 15000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சென்னையில் இருந்து மட்டுமே வெளியூர்களுக்கு சுமார் 8000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் போதுமான பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் ஆயுத பூஜை விடுமுறை முடிந்து மீண்டும் அனைவரும் பணிக்கு திரும்ப ஏதுவாக புதன்கிழமை வரை 8000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பயணிகளுக்கு கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.