மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி மூன்று மாத கோரிக்கைகளுக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான அகல விலைப்படி நான்கு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. பல மாநில அரசுகளும் ஊழியர்களுக்கு தசரா மற்றும் தீபாவளி பண்டிகை போனசாக அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நான்கு சதவீத அகலவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் எழுத்து வடிவில் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில் தீபாவளி போனஸ் ஆக அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.