தேசியக்கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வருகை தந்த நிலையில் அப்போது மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் கொண்டு வந்த இந்திய தேசிய கொடியை காவல் உதவி ஆய்வாளரான நாகராஜன் குப்பை தொட்டியில் போட முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.