கடலில் உருவாகியுள்ள ஹமூன் தீவிர புயலாக வலுப்பெற்றதால் சென்னை கடலூர் தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுப்பெற்ற ஹமூன் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது. இது நாளை பகல் கொபுபரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.