சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததால் சென்னைக்கு செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அண்ணன் ஊர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னலை கடந்து சென்றதால் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.