போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜன.09) வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த நிலையில், நாளை பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். 2 கோரிக்கைகளை ஏற்பதாக ஏற்கனவே போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

2 கோரிக்கைகளை ஏற்றதால் தான், பொங்கலுக்கு பின் மற்றவை குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். இதனால் பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் நிம்மதியடைந்துள்ளனர்.