கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து உள்ளனர். இதனால் மது விற்பனை தமிழகத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 25 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையும் மீறி டாஸ்மாக் கடைகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.