இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை பரிசாக இருவது சதவீதம் போனஸ் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளது.

அதனைப் போலவே தற்காலிக தொகுதி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3000 ரூபாய் கருணைத்தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் பணியாற்றும் சுமார் 49,002 ஊழியர்களுக்கு 23 கோடி ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.