தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்பப் பெரும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. முதல் கட்டமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது . பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யவும் காலி பாட்டிலை திரும்ப பெற்றதும் அந்த பத்து ரூபாயை வாடிக்கையாளரிடம் திரும்ப ஒப்படைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.