தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் அண்மையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்களில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 25 உழவர் சந்தையில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள் மற்றும் மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கி நுகர்வோர் இடம் விழிப்புணர்வு ஏற்படுத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.