தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எண்ணூர் பகுதியில் எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். மழை நீரால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை பார்வையிட்ட பிறகு பேசிய அவர், எண்ணெய் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.