நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலங்களவையில் திமுக ஏ பி அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. மக்களின் மனதில் நிலைத்து நின்று வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் எப்போதும் எந்த சூழலிலும் பயன்படுத்துவோம், அனைவரும் பயன்படுத்துங்கள் என்று முதல்வர் குறிப்பிட்டார்.