தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய பாடப்புத்தகங்களை இழந்து தவிக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பாடப் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட உடமைகளை இழந்த மாணவர்களுக்கு இன்று முதல் புதிய பாடப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்களுடைய கல்வி பாதிக்காத விதமாக அவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.