தமிழகத்தில் இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற இருக்கிறது. சென்னை மணலி- மாத்தூர், எம்எம்டி, இரண்டாவது பிரதான சாலை, கொரட்டூர், டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா, ஜூனியர் காலேஜ் போன்ற இடங்களில் பிற்பகல் 3 மணிக்கும், குரோம்பேட்டை மகாதேவன் தெரு விவேகானந்த பள்ளி பக்கத்தில் மாலை 4:00 மணிக்கு நடைபெற இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் வட தமிழக கிளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடப்பதனால் சென்னை உட்பட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.