தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலமாக டிசம்பர் 4  ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.