தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் நேரத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை திருச்சி கோவை ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் பெரம்பலூர் அரியலூர் நாமக்கல் ஈரோடு கரூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.