தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திருச்சி மற்றும் விருதுநகர் நகர பேருந்தின் நாற்காலி சாலையில் விழும் காட்சி மற்றும் பேருந்தில் ஏற்பட்ட சேதம் குறித்த வீடியோக்கள் வெளியானது. இந்த நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் போக்குவரத்து துறைக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டபோது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறைகள் ஏதாவது இருந்தால் அதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மாநகர பேருந்து உள்ளிட்ட 20 ஆயிரம் பேருந்துகளை ஆய்வு செய்து உடனடி அறிக்கை வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.