தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை நாளை விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடப்பு ஆண்டு ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.