மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் சுரேஷ் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக வாளுடன் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்து அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.