கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணியன் குழி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசீனா என்ற மனைவி உள்ளார். நேற்று ,முன்தினம் ஹசீனா தனது இரண்டு மகள்களுடன் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதிக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், ஐந்தாயிரம் பணம், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை தனது மணி பர்சில் போட்டு வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு செல்வதற்காக ஹசீனா தனது மகள்களுடன் தனியார் வேனில் ஏறியுள்ளார்.

அந்த வேனில் கூட்டம் இருந்ததால் சிலர் ஏறி விட்டு திடீரென கீழே இறங்கினர். இதனை தொடர்ந்து ஹசீனா வீட்டிற்கு சென்று பார்த்தபோது மணிபர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சசியடைந்தார். வேனில் ஏறிய போது யாரோ மணி பரிசை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஹசீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.