கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐஸ்கிரீம் குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை முடிந்து குடோனை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்குடி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.