சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூத்த ஆசிரியர் இயக்கம் சார்பாக சென்னை பள்ளிக்கல்வி வளாகம் அருகில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர் .இருப்பினும் ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டம் தொடர்ந்தார்கள்.

மேலும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் போராட்டமும் நடக்கும். இந்த நாட்களில் அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் இன்று  சென்னையில் தொடர் முற்றுகை போராட்டமும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டமும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு செவி சாய்க்காததால் இன்று (26ஆம் தேதி) முதல் தீவிர போராட்டம் நடத்தவுள்ளனர். இதனால் அரசுப் பள்ளிகள் செயல்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது/