வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகத்தில் பின்பற்றப்படும் உணவு பழக்கவழ க்கத்தால் தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்து, பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான அளவில் கிடைக்காமல் போகிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதற்காக, மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றனர்.

ஆனால் இது எந்த நேரமும் கிடைப்பதில்லை. எனவே 24 மணி நேரமும் தாய்ப்பால் கிடைக்கும் விதமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்டரில் அமைந்துள்ள தாய்ப்பால் 24 மணி நேர ஏடி.எம்.மில் 24 மணி நேரமும் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்களிடமிருந்து பெறப்படும் தாய்ப்பாலானது பரிசோதனைக்கு பிறகு விநியோகிக்கப்படுகிறது.