தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திமுக மகளிரணி – மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. அதில் பேசிய கனிமொழி எம்.பி, மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசானது குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணம் கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்.

மகளிர் உரிமைத் தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதலமைச்சரே சொல்லக்கூடிய அளவிற்கு தொடர்ந்து தமிழகத்திற்கு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர் என கூறியுள்ளார்.