நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என ஏ.சி சண்முகம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என ஏ.சி சண்முகம் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதிமுகவுக்கு பிரதமர் வேட்பாளர் என யாரும் இல்லை, நாளை மோடியை கூட பிரதமராக ஏற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.