ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஆகஸ்ட் 9 உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே சேலம் மாவட்டத்திலும் இன்று அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இன்று அனைத்து கல்வி நிறுவனங்களும் அரசு அலுவலகங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பாக பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை போலவே ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் இன்று ஊள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.